Blog Archive

Wednesday, October 25, 2023

Tamil massacreS in the East by Muslim home guards

 




அம்பாறையில் தமிழர்களை சுட்டும் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த முஸ்லிம் ஊர்காவல் படை! ஜூன் மாதம் இதே நாளில் ஆரம்பமான இந்த படுகொலைச் சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று ஓகஸ்ட் மாதம் 15ஆம் நாள்வரை பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை நரபலியெடுத்தது.




வீரமுனை தமிழ் மக்கள் மண்ணாக இருந்தது.  1945ஆம் ஆண்டு வீரமுனைத் தமிழ் மக்கள் முஸ்லிம் காடையர்களால் குறிவைக்கப்பட்டனர். அந்த ஆண்டு பலர்  கொல்லப்பட்டதனால் வீரமுனையின் அயல் ஊர்களான வீரச்சோலை, வளதாப்பிட்டி, மல்லிகைத்தீவு, மல்வத்தை போன்ற ஊர்களில் தஞ்சமடைந்தனர்.

June 20, 1990: கொண்டவெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த இராணுவத்தாலும் முஸ்லிம் காடையர்களாலும் வளதாப்பிட்டிய, வீரமுனை, வீரச்சோலை ஆகிய கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. அனைத்து மக்களையும் வீரமுனை கோவிலடியை நோக்கிச் செல்லுமாறு இராணுவத்தினர் பணிக்கின்றனர். ஏற்கனவே கல்முனைப் படுகொலையை அறிந்த மக்கள் பலத்த அச்சத்துடன் அங்கு செல்கின்றனர். கோவிலில் வைத்தே 56 ஆண்கள் படுகொலை வேட்டைக்காக தெரிவுசெய்யப்படுகின்றனர். அழைத்துச் செல்லப்பட்டு சம்மாந்துறை மலைக் காட்டில் வைத்து சுடப்பட்டு எரிக்கப்பட்டனர்.

மீண்டும் 29ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டு மீதமிருந்த ஆண்கள் பலரும் பிடித்துச் செல்லப்பட்டு கொண்டவெட்டுவான் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து எஞ்சியிருந்த மக்கள் காரைதீவுக்கு தப்பிச் சென்றனர். காரைதீவு பாடசாலையில் மக்கள் தஞ்சமிருந்தபோது அங்கேயும் கொலை வேட்டைக்கான அப்பாவித் தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அகதிமுகாமென்றும் பாராது ஜூலை 4ஆம் நாள் அங்கு புகுந்த விசேட அதிரடிப்படையினர் முதற்கட்டமாக 12 ஆண்களைப் பிடித்துச் சென்றனர். 


மீண்டும் ஜூலை 10ஆம் நாள் அகதிமுகாமில் புகுந்த அதிரடிப்படையினர் எஞ்சியிருந்தோரில் 11 ஆண்களை பிடித்துச் சென்றனர். அவர்களின் கதையும் கேட்பாரின்றி அத்துடன் முடிவுற்றுப்போனது. வீரமுனை ஆண்கள் எங்கிருந்தாலும் அழிக்கப்பட்டார்கள். சில நாட்களின் பின்னர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்களில் பெரும்பாலும் பெண்களே எஞ்சியிருந்தனர். பலர் பாலியல் படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

ஜூலை 26ஆம் நாள் மீண்டும் ஒரு சுற்றிவளைப்பை மேற்கொண்ட கொண்டவெட்டுவான் இராணுவத்தினர் எட்டுப்பேரைப் பிடித்துச் சென்றார்கள். அவர்களின் கதையும் அத்துடன் முடிவுற்றது.


Aug 8th: சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர், 8 பேரை வெட்டி கிணற்றில் போட்டனர்.

வீரமுனையில் இனிமேலும் வசிக்கமுடியாதென்று கருதிய மக்கள் மண்டூருக்கு இடம்பெயர்ந்தபோது 11ஆம் நாள் சவளக்கடை இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து தடுக்கப்பட்டு 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.

மீண்டும் ஊர்களுக்கே வந்த மக்கள்மீது மறு நாள் 12ஆம் திகதி மீண்டும் உக்கிர கொலைத் தாண்டவம் ஆரம்பமானது. கொண்டவெட்டுவான் இராணுவத்துடன் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து மக்களின் வீடுகளைத் தீயிட்டு எரித்தனர். சொத்துக்களைச் சூறையாடினர்.  25பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதிலிருந்து தப்பிச் சென்று அம்பாறை வைத்தியசாலையில் தஞ்சம் புகுந்த மக்களும் வேட்டையாடப்பட்டார்கள். காயங்களோடு பிடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை இல்லை…

இவ்வாறாக தொடர் படுகொலை வேட்டைகளைச் சந்தித்த வீரமுனை உள்ளிட்ட அயல் கிராமங்களில் நிகழ்ந்த நரபலி வேட்டைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்பதுடன் தமிழ் மக்களின் நிலம் இன்றுவரை ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது என்றுதான் சொல்லமுடியும்.

திராய்க்கேணி படுகொலைகள்: Aug 6, 1990: அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் சிறப்பு இராணுவப் படை  47 தமிழர்களை படுகொலை செய்தனர்.
கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களை கொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் கொளுத்தப்பட்டனர். 350 🏡 தீக்கிரையாக்கப்பட்டன. 

காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். 

Oct  12, 2003: திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

Oct  12, 2003: திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை. கொல்லப்பட்டவர்களில் 3 குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டுமாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார்.




இச்சம்பவத்தில் 8 வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.


இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன:
-சம்மாந்துறை
-சித்தாண்டி
-பொத்துவில்
-கல்முனை
-துறைநீலாவணை
-ஏறாவூர் வைத்தியசாலை
-கோராவெளி ஈச்சையடித்தீவு
-ஏறாவூர்
-நற்பிட்டிமுனை
-புதுக்குடியிருப்பு
-கொக்கட்டிச்சோலை
கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்




1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. 

திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் கொலைசெய்தனர்.

மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தமிழ்-முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாகமைந்தபோதிலும் எவராலும் நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.
இக்காலப்பகுதியில்  ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன.



Tamil massacreS in the East by Muslim home guards MUST be addressed.  Taking incidents done by SL state & their allies has been put on LTTE to further drive a drift between Tamils & Tamils Muslims. 






"முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியது தவறென்று விடுதலைப்புலிகள் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதுடன் அதற்கு வருத்தமும் தெரிவித்தாhர்கள். 2004ல் அவ்வாறு வெளியெற்றப்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களில் வந்து மீளக் குடியேறலாம் என்றும் அறிவித்தார்கள்."

"முஸ்லீம் ஊர்காவல் படையிரால் தமிழ் மக்கள் மீது நடத்தபட்ட இனப்படுகொலைகளுக்கும் முத்தலீப் போன்ற முஸ்லீம் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் தமிழ் இளைஞர களும் இளைஞிகளும் கொடூரமாக சித்திரவதை,படுகொலை செய்யப்பட்டதற்கும் எந்த முஸ்லீம் தலைவர்களாவது வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா?"

"அது தவறு என்றாவது ஒப்புக்கொண்டிருக்கிறார்களா?
முஸ்லீம் அப்பாவி மக்களின் இருப்பு என்பது வேறு முஸ்லீம் அடிப்படை வாதத்தின் இருப்பு என்பது வேறு."

It's time we write, talk & share the horrors that took in the Eastern provinces - massacres to land genocide that continues to take place. 

Picture of a mosque in Mullaitheevu stands tall. Can you say the same for other religious worship places in the East?! 






Sources:
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_1990…

https://eelamview.com/2019/06/21/amparai-muslim-para-militray/



No comments:

Post a Comment

DMK councilor involved in drug trafficking with the help of the Stalin government?

Did you know Nawas of DMK, aka Drug lord, is from the same hometown as a DStock abuser here who sits online & promotes propaganda of Tig...